திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கிடையில் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மடத்துக்குளம் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் குமரேசனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வரவேண்டும். அது வந்தால்தான் உங்கள் வாழ்க்கையின் தரம் , நிறம் மாறும். நாங்கள் பல நல்ல திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டை மேம்படுத்தப் பல அலுவலர்கள் ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் திட்டங்களை வகுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.