தமிழ்நாடு

tamil nadu

மது போதையில் காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

By

Published : Mar 15, 2020, 10:19 PM IST

திருப்பூர்: பெருமாநல்லூரில் பணியில் இருந்த காவலரை மது போதையில் தாக்கிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

tiruppur-three-drunken-people-arrested-for-assaulting-a-police-man
மதுபோதையில் காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நான்கு வழி சாலை அருகே மது போதையில் ஹர்சன் என்பவரும் அவரது இரண்டு நண்பர்களான சிவகுருநாதன், யுவராஜ் ஆகியோர் மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர்.

இதையறிந்த பெருமாநல்லூர் காவலர்களான ஈஸ்வரமூர்த்தி, சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மது போதையில் இருந்த அவர்கள் மூன்று பேரும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஈஸ்வரமூர்த்தியை தாக்கிவிட்டு அவரது செல்போனையும் உடைத்துள்ளனர்.

இதனையடுத்து பெருமாநல்லூர் காவல்துறையினர் மது போதையில் இருந்த ஹர்சன், சிவகுருநாதன், யுவராஜ் ஆகிய மூன்று பேரையும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த காவல்துறை, அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். காயமடைந்த காவலர் ஈஸ்வரமூர்த்தி அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெருமாநல்லூர் காவல் நிலையம்

இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேரத்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details