தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 2:05 PM IST

ETV Bharat / state

திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கைது

திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பெரியார் உணர்வாளர்கள் கைது
Tiruppur

வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.

மேலும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை முழக்கமிட்டவாறு திருப்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details