திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக் டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.
இவரது அத்துமீறிய வீடியோக்களால் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டு நாளடைவில் அதனையே தனது பெயரை மாற்றினார் சூர்யா. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கே அவருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16-ஆம் தேதி வந்தார். சிங்கப்பூரில் இருந்து அவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் சுகாதாரத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.