ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குடிமகன்கள் மது கிடைக்காமல் தள்ளாடிவருகின்றனர்.
இதனால், சட்டவிரோதமாக ஆங்காங்கே சமூகவிரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இதேபோல், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் காவல் துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் வந்துள்ளது.
இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் உத்தரவின்படி காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வலையபாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகத் தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.