தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் டிரைவர் வெட்டிக்கொலை; உடல் அருகே 2 பட்டா கத்திகள் - தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை! - திருப்பூர் செய்திகள்

திருப்பூர்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓட்டுநர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

thiruppur little flower nagar murder  thiruppur latest news  திருப்பூர் செய்திகள்  திருப்பூர் லிட்டில் பிளவர் கொலை
திருப்பூரில் டிரைவர் வெட்டிக்கொலை..3 தனிப்படை அமைத்து கொலையாளியைத் தேடும் காவல்துறை

By

Published : Jul 12, 2020, 11:56 AM IST

தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார். தஞ்சாவூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்றிரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், பேச்சிமுத்துவின் உடலைக் கைப்பற்றினர். மேலும், உடல் அருகே இருந்த இரண்டு பட்டா கத்திகள், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நாச்சிப்பாளையத்திலிருந்து இவர் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிட்டில் பிளவர் நகருக்கு ஏன் வந்தார், அவரைக் கொலைசெய்தது யார் என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:விவசாய நிலத்திற்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்

ABOUT THE AUTHOR

...view details