தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாலையைச் சரிசெய்யுங்க' - நாற்று நட்டுப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்! - திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருப்பூர்: மாநகரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/06-December-2019/5288217_ttt.mp4
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/06-December-2019/5288217_ttt.mp4

By

Published : Dec 6, 2019, 5:42 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54ஆவது வார்டு வீரபாண்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலைகள், பல்வேறு பகுதிகளில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.

மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாது சாலைகளில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'சாலையைச் சரிசெய்யுங்க' - நாற்று நட்டுப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!
இதையும் படிங்க மும்பைக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் நாமக்கல் வழியாக செல்லும்!

ABOUT THE AUTHOR

...view details