தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக நீதியைக் காக்க வழக்கறிஞர்கள் புதிய மனு! - வழக்கறிஞர்களின் புதிய மனு

திருப்பூர்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார் கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவத்தில் துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

வழக்கறிஞர்களின் புதிய மனு
வழக்கறிஞர்களின் புதிய மனு

By

Published : Jun 17, 2020, 5:50 PM IST

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தெய்வம்பாளையம் பகுதியில் லோகநாதன் என்பவரின் வீட்டு ஆட்டுக்குட்டி வேறு சமூகத்தினரின் தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேறு சமூகத்தினர், லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வற்புறுத்தியுள்ளனர். அதனை மறுத்த லோகநாதன் குடும்பத்தினர், மீது சாதிய ரீதியிலான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அவினாசி காவல் நிலையத்தில் லோகநாதன் கொடுத்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அவினாசி காவல் துறையினர், லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது சட்டத்திற்குப் புறம்பான செயல் எனவும்; இதன் மீது துணை காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், வலியுறுத்தி சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் குழுமம் சார்பில் இன்று( ஜூன் 17) திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய மனு - மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details