தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: கலால் உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 280 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

கையூட்டு வாங்கிய கலால் உதவி ஆணையரிடம் விசாராணை நடத்திய அதிகாரிகள்

By

Published : Oct 26, 2019, 11:30 AM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல்கத்தின் முதல் தளத்தில் உள்ள 129, 130ஆவது அறையில் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது.

கையூட்டு வாங்கிய கலால் உதவி ஆணையரிடம் விசாரணை நடத்திய அலுவலர்கள்

தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் மதுபான கூடங்கள், விடுதி உள்ளிட்டவற்றிலிருந்து தீபாவளி அன்பளிப்பாக பணமோ, பரிசுப்பொருள்களோ கையூட்டாக வழங்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் காவல் உதவி ஆணையர் ஜெயராணியிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 280 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : நகராட்சி அலுவலகத்தில் சிக்கிய ரூ.70,000 கணக்கில் வராத பணம்!

ABOUT THE AUTHOR

...view details