தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக கோவை மண்டபத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கோவையில் தொழில்துறையினருடனான சந்திப்பை முடித்த பின்பு திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றவுள்ளார்.
பின்பு திருப்பூர் ரயில் நிலையம் முன்புள்ள குமரன் நினைவகம் சென்று திருப்பூர் குமரனுக்கு மரியாதை செலுத்தும் அவர், பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார் .