தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வாய்மையே வெல்லும்" தார்மீக உரிமையை மீறிவிட்ட அரசு - டாஸ்மாக் மூடாததற்கு கண்டனம் - டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

திருப்பூர்: மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை எனக் கூறி அனைத்து கட்சியினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Petition demand to close tasmac shop
குடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

By

Published : Dec 22, 2020, 5:23 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் மற்றும் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் 90 நாள்களில் கடையை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி 90 நாள்கள் ஆனபோதிலும் அரசு மதுபானக் கடை அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு "வாய்மையே வெல்லும்" என்ற அரசின் தார்மீக உரிமையை மீறி விட்டதா என்ற சுவரொட்டியோடு அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

"வாய்மையே வெல்லும்" தார்மீக உரிமையை அரசு மீறிவிட்டதாக போஸ்டர்

மேலும், வாக்குறுதி அளித்தபடி மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்திய இளைஞர்: போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details