திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ் திமுக நகர செயலாளர் தனசேகர் மற்றும் மநீம மாநில பொருளாளர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்தினர்.
புதன்கிழமை (மார்ச் 17) தொடங்கிய சோதனை இன்று (மார்ச் 19) வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது. மேலும், திருப்பூரில் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர், தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கரோனா கவச ஆடைகள், முகக்கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார்.