தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டுப்பாறை பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலம் மீட்பு! - கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் திட்டுப்பாறை பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் மீட்க்கப்பட்டது.

paramasivantemple-at-dittuparai
paramasivantemple-at-dittuparai

By

Published : Jun 18, 2021, 9:05 AM IST

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுக்கா திட்டுப்பாறை அருகே சிவியார்பாளையத்தில் அருள்மிகு பரமசிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 72.86 ஏக்கர் நிலம் உள்ளது.

அதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 69.81 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக 19 பேர் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் நால்ரோடு கிராமம், சாவடி என்ற ஊருக்கு தென்புறமாக சென்னிமலை - காங்கேயம் மெயின் ரோட்டுக்கு மேல்புறம் சுமார் 61 ஏக்கரும், ரோட்டுக்கு கீழ்புறம் சுமார் 9 ஏக்கருமாக உள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறநிலையத்துறையின் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்கிரமிப்பு குறித்து கோவை அறநிலையத் துறையின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் 19 மனுக்களின் படி விசாரணையும் நடைபெற்று வந்தது.

பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலம் மீட்பு
அதன் பிறகு இறுதியாக 2019 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி அன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைவரையும் நிலத்திலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு உட்பட்டு இதுவரை ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜுன்.17) திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் என்.நடராஜன் தலைமையில்,காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டது. அந்த நிலங்களில் அது பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details