திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "பாஜக தமிழ்நாட்டிற்கு அதிக திட்டங்களை அளித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்குப் போதிய நிதியினை ஒதுக்கிவருகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ் கட்சி. ஒட்டுமொத்த நாட்டையும் காங்கிரஸ் கட்சி பின்னோக்கி இழுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை வரக் காரணமாக இருந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான். ஆனால், மாநிலத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியவர் பிரதமர் மோடி.