திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் சுமார் 604 பயனாளிகளுக்கு தலா எட்டு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை வழங்கினார். மேலும் விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசுகையில், திருப்பூர் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நலத்திட்டங்களை வழங்கி வருவதாக கூறினார்.