தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு எதிரொலி: திருப்பூரில் நடைபெற்ற எளிமையான திருமணம் - திருப்பூரில் நடைபெற்ற எளிமையான திருமணம்

திருப்பூர்: 144 தடை உத்தரவின் காரணமாக சேவூர் அருகே கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

marriage-among-peoples-curfew-in-tirupur
marriage-among-peoples-curfew-in-tirupur

By

Published : Mar 30, 2020, 11:16 AM IST

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சேவூரைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோருக்கு இன்று அவிநாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவிருந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மண்டபத்தில் அவர்களது திருமணம் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது.

திருப்பூரில் நடைபெற்ற எளிமையான திருமணம்

இதையடுத்து, சேவூர் பகுதியில் உள்ள சிறிய கோயிலில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இதையும் படிங்க:மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் திருமணம்: 20 பேர் மட்டுமே பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details