தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழியை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்! - மாவட்ட ஆட்சியர் விஜய பிரபாகரன்

திருப்பூர்: நீர் மேலாண்மை, நெகிழியை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.

marathon

By

Published : Oct 13, 2019, 9:44 AM IST

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் மேலாண்மையை வலியுறுத்தியும் நெகிழி பயன்பாட்டினை குறைப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நான்கு பிரிவுகளின் கீழ் 13, 14 வயதுக்குட்பட்டோருக்கு 3 கி.மீ , 11 கி.மீ என ஆண்கள், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தானில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு மாரத்தான்

மேலும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க வலியுறுத்தி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: கோவையில், புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details