தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2021, 5:15 PM IST

ETV Bharat / state

3 கடைகள் மீது அடுத்தடுத்து மோதிய முட்டை லாரி - ஓட்டுனர் தலைமறைவு

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த முட்டை லாரி, சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் மீது அடுத்தடுத்து மோதியது.

3 கடைகள் மீது அடுத்தடுத்து மோதிய முட்டை லாரி - ஓட்டுனர் தலைமறைவுs
3 கடைகள் மீது அடுத்தடுத்து மோதிய முட்டை லாரி - ஓட்டுனர் தலைமறைவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே முட்டை லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் மீது நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து மோதியது. பின்னர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் சாலையோர கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. டூ வீலர் ஒர்க்‌ஷாப்பில் இருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான முட்டைகளும் உடைந்தன.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை
பல்லடம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் காமநாயக்கன்பாளையம் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details