திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இலவச கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலவச கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் ரூ.18.93 கோடி செலவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்தில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார்.