தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிற்சி வகுப்பில் செல்போன் பேச்சு - ஆட்சியர் கண்டிப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பூர்: வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

By

Published : Mar 30, 2019, 7:26 PM IST

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, வாக்களிக்கும் சின்னத்தை காட்டக்கூடிய விவிபேட் இயந்திரத்தை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பயிற்சி வகுப்பின்போது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் கண்டித்தார். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா என்று தெரிவித்தார்.


ABOUT THE AUTHOR

...view details