தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 2ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ கட்சியினர்! - Tirupur district news

திருப்பூர்: டெல்லியில் விவசாயிகள் போராடிவருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மா.கம்யூ கட்சியினர்
மா.கம்யூ கட்சியினர்

By

Published : Dec 2, 2020, 2:10 PM IST

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (டிச. 02) கையில் நாற்றுகளை ஏந்தியவாறு இரண்டாவது நாளாக, மத்திய அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பிறகு தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க:டெல்லி விவசாயிகள் போராட்டம் - மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details