தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2021, 5:21 PM IST

ETV Bharat / state

சிதிலமடைந்த சாலைகள்: மாநகராட்சியை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: சிதிலமடைந்து கிடக்கும் சாலைகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Communist party protest in tiruppur
Communist party protest in tiruppur

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், பணிகள் முடிந்த பிறகும் சரிவர மூடப்படாமல் இருந்துள்ளன.

இதன் காரணமாக சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருக்கும் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (ஜன. 11) திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details