திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், பணிகள் முடிந்த பிறகும் சரிவர மூடப்படாமல் இருந்துள்ளன.
இதன் காரணமாக சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருக்கும் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.