தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருப்பூரில் கரோனா வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை' - ஆட்சியர் தகவல் - Tirupur corona virus

திருப்பூர்: மாவட்டத்தில் எந்த நபருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இல்லை எனவும், தவறான வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றை இல்லை
கரோனா வைரஸ் தொற்றை இல்லை

By

Published : Mar 20, 2020, 11:52 PM IST

திருப்பூர் அரசு மருத்துவமனை, ரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இத்தாலி, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து திருப்பூர் திரும்பிய 19 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடத்தில் கரோனா வைரஸ் தொற்று இல்லை. வெளிமாநிலத்திலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வேலைக்காக வந்திருக்கும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் எந்த ஒரு நபரும் இல்லை" என்றார்.

கரோனா வைரஸ் தொற்றை இல்லை

மேலும், கரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details