ஊரடங்கை அடுத்து, 60 நாள்களாக சவாரியின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டில் முடங்கினர். அதனால் உணவிற்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டது. அரசு ஊரடங்கை தளர்த்தியதை அடுத்து ஆட்டோ ஓட்டுவதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாடகை ஆட்டோக்களை ஓட்டிவருகின்றனர். இதனிடையே அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோக்களை ஓட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.