தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் தொடக்கம் - பொதுப்பணித்துறை ஊழியர்கள்

திருப்பூர்: மாவட்டம் முழுவதும் 1,165 படுக்கைகளுடன் தற்காலிக கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்காலிக கரோனா சிறப்பு வார்டுகள்
தற்காலிக கரோனா சிறப்பு வார்டுகள்

By

Published : Apr 10, 2020, 11:38 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு திருப்பூர் மாவட்டத்தில் 26 பேருக்கு உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விதமாக திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் 32 அறைகளில் 150 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

தற்காலிக கரோனா சிறப்பு வார்டுகள்

இதேபோல் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தாலுகா வாரியாக சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 1,165 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிறப்பு வார்டுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித் துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மழையினால் சேதமடைந்த தற்காலிக காய்கறி சந்தை!

ABOUT THE AUTHOR

...view details