தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லடம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி! - பல்லடம் அருகே கார் மீது

Palladam accident: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 10:24 PM IST

திருப்பூர்:திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், பூபாலன், நித்திஷ். இவர்கள் மூன்று பேரும் காரில் நாமக்கலில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காருக்குள் பயணித்த மூன்று இளைஞர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து அந்த வழியே சென்றவர்கள் இவ்விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் காரில் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த இளைஞர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மருத்துவமனையில் மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் லாரி ஓட்டுநரான பாண்டியன் என்பவரை வலைவீசித் தேடி வருகின்றனர். பல்லடம் அருகே கார் மீது லாரி மோதிய சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தென்காசியில் இளம்பெண் கூட்டு பாலியல்.. கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details