தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் ஒரே தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த 19 மயில்கள்

ஒரே தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக தோட்ட உரிமையாளரைக் கைதுசெய்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

By

Published : Jul 17, 2021, 10:16 PM IST

Published : Jul 17, 2021, 10:16 PM IST

மயில்கள்
மயில்கள்

திருப்பூர்:பல்லடத்தை அடுத்த வலசுபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துகிடந்துள்ளன.

இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பூர் வனத் துறையினர் உயிரிழந்து கிடந்த ஏழு ஆண் மயில்கள், 12 பெண் மயில்கள் என 19 மயில்களை உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில் தோட்டத்தில் கிடந்த அரிசிகளைச் சாப்பிட்டதில் மயில்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தோட்டத்தின் உரிமையாளரான விவசாயி பழனிச்சாமியைக் கைதுசெய்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு இடையூறாக இருந்ததால் மயில்களுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேசிய பறவை

ABOUT THE AUTHOR

...view details