திருப்பூர் மாவட்டம், சேவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது.
இவர் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அவர்கள் எரிசாராயம் தயாரித்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக சேலம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.