ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், குடும்ப தலைவிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரப்படும். மக்கள் அனைவரும் மருந்தாக சாப்பிடும் மதுவை, புதுச்சேரியில் இருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் கண்டிப்பாக வழங்குவேன்' என்றார்.