திருப்பத்தூர்: கொரட்டி தரைப்பாலம் வழியாக தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம் பள்ளி எனச் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப்பாலம் உடைந்தது.
இதற்கிடையில் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35) கொரட்டி பகுதிக்கு தேநீர் அருந்த சென்றுள்ளார். அப்போது உடைந்த தரைப்பாலத்தில் கயிறு கட்டி இருந்ததை பிடித்து கொண்டு கடந்து சென்றுள்ளார்.
பிறகு தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு அதேபோல் சென்றுவிட்டார். பின்னர் தான் எடுத்து சென்ற குடையை தேநீர் கடையில் மறந்து வைத்து விட்டு வந்தது அவருக்கு தெரியவந்தது.