தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறுதலாக வெடித்த நாட்டு துப்பாக்கியால் மனைவி படுகாயம்; கணவன் கைது! - கணவன்

ஆம்பூர் அருகே எதிர்பாராவிதமாக நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த மனைவி வயிற்றில் குண்டுகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் கைது
கணவன் கைது

By

Published : Jan 25, 2023, 9:19 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு குப்புராசபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். கூலி தொழிலியான இவர் தனது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் கள்ளத்தனமாக இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் சிலம்பரசன் நாட்டுத்துப்பாக்கிகளுக்கு மருந்துகளை நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக சுட்டத்தில் சிலம்பரசனின் மனைவி கஸ்தூரியின் வயிறு மற்றும் தொடையில் நாட்டுத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக கஸ்தூரியை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சிலம்பரசனை கைது செய்து, கள்ளத்தனமாக அவர் வைத்திருந்த இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நிரந்தரப்பணிக்கு ஆசைப்பட்டு 5 மாத குழந்தையைக் கொலை செய்த பெற்றோர் கைது!

ABOUT THE AUTHOR

...view details