தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2021, 10:41 AM IST

ETV Bharat / state

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை!

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலைசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

thirupattur woman murder  murder news  thirupattur news  thirupattur latest news  crime news  woman was murdered by unidentified way  murder case  குற்றச் செய்திகள்  திருப்பத்தூர் செய்திகள்  திருப்பத்தூர் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை  பெண் கொலை  வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை  கொலை  கொலை வழக்கு
தனியாக இருந்த பெண் நிர்வாண நிலையில் கொலை..

திருப்பத்தூர்: வாணியம்பாடி உமர்நகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹிதா (40), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனைப் பிரிந்து, தனது மகள் சித்திகா உடன் தனியாக வசித்துவந்தார். அவரது மகள் சித்திகா வாணியம்பாடி பகுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறார்.

நேற்று முன்தினம் (ஜூன் 19) வேலைக்குச் சென்ற சித்திகா, பணி முடிய நீண்ட நேரம் ஆனதால், பணியிடத்திலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் ஷாஹிதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதையடுத்து சித்திகா நேற்று (ஜூன் 20) வேலை முடிந்து வீடு வந்தபோது, அவருடைய தாய் நிர்வாண நிலையில், உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஷாஹிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details