திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே அப்பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (27) மற்றும் லட்சுமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (29) என்ற இரு பெண்களும் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர், அங்கு படுத்து உறங்கிய பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால், இருவருமே ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்து வந்தவர்கள், இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கௌசல்யா என்ற பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் தான், கத்தியால் குத்தினார் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தேவேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.