திருப்பத்தூர்:வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் எட்டு பேர் கொண்ட கும்பலால் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 21 குற்றவாளிகளைக் காவல் துறையினர் கைதுசெய்து வேலூர் மத்திய சிறை, சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இதில் முக்கியக் குற்றவாளியான டீல் இம்தியாஸ், அவரது கூட்டாளியான ஃபைசல் அஹமத், காலு என்கின்ற தாஸ்தகீர், நயீம், டெல்லி குமார், செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20), செல்வா என்கின்ற செல்வகுமார் (25), மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்திய என்கின்ற சத்திய சீலன் ஆகிய எட்டு பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.