தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயலில் நாற்று நட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் - Trippattur Collector

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவும், அவரது மனைவியும் உழவர்களுடன் சேர்ந்து நிலத்தில் இறங்கி நாற்று நட்டனர்.

விவசாயியாக மாறிய மாவட்ட ஆட்சியர்
விவசாயியாக மாறிய மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 27, 2021, 6:45 AM IST

திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அவரது மனைவி ஷிவாலிகா ஆகிய இருவரும் தங்களது இரண்டாவது கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மூக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற நெற்பயிர் நடும் நிகழ்ச்சியில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அவரது மனைவி இருவரும் கலந்துகொண்டு, உழவர்களுடன் நிலத்தில் இறங்கி நாற்று நட்டனர்.

விவசாயியாக மாறிய மாவட்ட ஆட்சியர்

இதனைக் கண்ட உழவர்கள், ஊர் மக்கள், அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரை வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க:குயின்ஸ் லேண்ட் இடத்தை நிச்சயம் மீட்போம் - அமைச்சர் சேகர் பாபு

ABOUT THE AUTHOR

...view details