வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா தொற்று நிலவரம் குறித்து மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன், அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நீலோபர் கபீல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது மூன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் உடனிருந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நீலோபர் கபீல் பேசும்போது, "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குத் தனி வசதி செய்துதர வேண்டும். வாணியம்பாடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்குத் தனி அறை கொடுக்க நான் அலுவலகர்களைத் தொடர்புகொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும்" என்றார்.