திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் எம்.செந்தில்குமார் (47). இவர் வாணியம்பாடி அடுத்த ஆத்துமேடு பகுதியில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி அருகே நியூடவுன் என்கிற பகுதிக்கு நடைப்பயிற்சிக்காகச் சென்றபோது, மர்ம கும்பல் செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி கடத்தி சென்றனர்.
பின்னர், செந்தில்குமாரின் சகோதரர் உதயசந்திரன் என்பவரைத் தொடர்பு கொண்டு, செந்தில்குமாரை உயிருடன் விட வேண்டும் என்றால் தங்களுக்கு 1 கோடி ரூபாய் பணம் தருமாறும், சில மணி நேரங்களில் 50 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியதோடு, பணத்தை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.
அதனை அடுத்து கடத்தப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் செந்திகுமாரின் சகோதரர் உதயசந்திரன், கடத்தல் கும்பல் மிரட்டி கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் கூறியது போன்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் பணத்தை பெற்றுக்கொண்ட கடத்தல் கும்பல், செந்தில்குமாரை விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் ஓடும் காரில் பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!