திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இதுவரையில் இல்லாத வகையில் புதிதாக 108 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,383ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில், கரோனாவிலிருந்து மீண்டு இதுவரை 3,664 பேர் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர்.