தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 673ஆக உயர்வு! - tirupathur corana

திருப்பத்தூர்: இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 673ஆக உள்ளது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

By

Published : Aug 26, 2020, 8:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,673ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து 2062 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் 52,885 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு 1,724 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details