தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் சுவர் இடிந்து விபத்து... 3 வயது குழந்தை உயிரிழப்பு - சுவர் இடிந்து

ஆம்பூர் அருகே வீட்டின் மேல்பக்கசுற்றுச்சுவர் இடிந்து வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் சுவர் இடிந்து விபத்து.., 3 வயது குழந்தை பலி..!
கனமழையால் சுவர் இடிந்து விபத்து.., 3 வயது குழந்தை பலி..!

By

Published : Aug 18, 2022, 10:55 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியைச்சேர்ந்தவர் சுரேந்தர். கட்டடத்தொழிலாளி ஆன இவருக்கு வாணி என்ற மனைவியும் வர்ஷினி (3) என்ற பெண் குழந்தையும் ஓர் பெண் கைக்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், நேற்று(ஆக.17) மாலை முதல் இரவு வரை ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் சுரேந்தரின் வீடு கனமழையில் நனைந்து மிகுந்த சேதாரம் அடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று(ஆக.18) மாலை சுரேந்திரனின் குழந்தை வர்ஷினி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கனமழையால் சேதமடைந்த வீட்டின் மேல்பக்க சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த வர்ஷினி மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துக்கொண்டிருந்த போதே சிகிச்சைப் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வீட்டின் மேல்பக்க சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்து குழந்தை உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆம்பூரில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றினர்

ABOUT THE AUTHOR

...view details