திருப்பத்தூர் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பரப்புரை வாகனங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் சிவனருள் இன்று (மார்ச் 20) தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, கிருமிநாசினி வழங்கப்படும். அதுமட்டுமல்லாது அவர்களது உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படும். இதற்காக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அரசியல் கட்சியினர் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளவரும் மக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். முன்களப் பணியாளர்கள், தேர்தலில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.