திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் பகுதியில் 49ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் இவ்விழாவில் பங்கேற்றன. போட்டி தொடங்குவதற்கு முன்பு அனைத்துக் காளைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறைந்த நேரத்தில் அதிவேகமாக ஓடிய 20க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 70,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 60,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 45,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைக் கண்டுகளித்தனர்.