திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கௌரவன் (38). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார்.
சொந்த ஊருக்கு வந்த அவர் நண்பர் பெருமாள் (30) என்பவருடன் சேர்ந்து பொத்தான்குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு குளித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே இக்கரையிலிருந்து அக்கரைக்கு யார் முந்தி செல்கிறார்களோ அவருக்கு ஆயிரம் ரூபாய் என பேசி தண்ணீரில் நீந்திச் சென்றுள்ளனர். முதலில் பெருமாள் கரையைக் கடந்துள்ளார்.