தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கல் - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: கோடை வெயில் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கல்
போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கல்

By

Published : Apr 13, 2021, 5:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடும் வெயிலிலும் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்று (ஏப்ரல்.13) போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: கடும் வெயில் தாக்கத்திற்கு இடையே திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details