தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - Smuggling of ration rice bundle at Vaniyambadi

வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக வாணியம்பாடி, ஷாகிராபாத் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Mar 9, 2021, 4:32 PM IST

திருப்பத்தூர் :திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியான ஷாகிராபாத் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயில்வே தண்டவாளம் ஒட்டியுள்ள முட்புதரில் சுமார் 5 டன் எடையுள்ள 80 ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 80 ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மக்காச்சோளக் காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

ABOUT THE AUTHOR

...view details