தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி நெகிழிப் பைகள் உபயோகம்: திடீர் ஆய்வில் சிக்கிய கடைகள்

திருப்பத்தூர்: பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

By

Published : Mar 16, 2020, 3:23 PM IST

தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் உபயோகம்
தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் உபயோகம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இங்கு, பெரும்பால கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலர்கள் ஆய்வு

இதையடுத்து, முன்னறிவிப்பின்றி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையிலான திடீர் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி, பூக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாட்டிலிருந்தது தெரியவந்தது.

இதனைக் கண்டறிந்து பாலித்தீன் பைகளைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், மீண்டும் பாலித்தீன் பைகளை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details