திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் இயங்கிவருகிறது நகராட்சி இந்து தொடக்கப்பள்ளி.
பள்ளியில் பாம்பு
இந்நிலையில் நேற்று (டிச. 17) மாலை இந்தப்பள்ளி வளாகத்திற்குள் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பள்ளிவளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் கண்டனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்து, பின்னர் வாணியம்பாடி வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.