திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட சுட்டாகுண்டா பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் 89 பெத்தூர் என்னும் கிராமத்திற்குச் செல்லும் மலைச்சாலை என்னும் பிரிட்டிஷ் இராணுவ சாலை ஒன்று உள்ளது. இச்சாலையானது தமிழகத்தில் 4 கிலோமீட்டர் தூரமும் ஆந்திராவில் 6 கிலோமீட்டர் தூரம் என 10 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவின் 89 பெத்தூர் என்னும் கிராமத்தை சென்றடைகிறது.
இச்சாலையானது தமிழ்நாடு சித்தூர் மாநிலத்தில் இருந்தபோது ராணுவ வீரர்கள் பயிற்சி பெற பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ சாலை தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது இச்சாலையில் அதிக அளவு மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இருந்த போதும் ஒத்தையடி பாதையாக இச்சாலை தற்போது வரை இருந்து வருகிறது. இது குறித்து தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான சுட்டகுண்டா பகுதியில் வசிக்கும் விவசாயி ஜெயகுமார் கூறுகையில், “தலைமுறை தலைமுறையாக தமிழ்நாடு ஆந்திரா மக்கள் இந்த ராணுவ சாலையை பயன்படுத்தி வந்தனர்.