தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 12:02 PM IST

ETV Bharat / state

9 அடி மலைப் பாம்பை பிடித்த இளைஞர்கள்: வனத் துறையினரிடம் ஒப்படைப்பு!

திருப்பத்தூர்: ஆம்பூரில் விவசாயியின் நிலத்திலிருந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் அதனை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

9 அடி மலைப் பாம்பை பிடித்த இளைஞர்கள்
9 அடி மலைப் பாம்பை பிடித்த இளைஞர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள நாச்சியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகம். இவர் நேற்றிரவு (நவ. 30) அவரது நிலத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திருந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அங்கு வந்த பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத் துறையினரிடம் அந்தப் பாம்பை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து மலைப்பாம்பை கைப்பற்றிய வனத் துறையினர், அதனை வெள்ளக்கல் காப்புகாட்டுப் பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.

இதையும் படிங்க: 'சதுரங்கவேட்டை' பட பாணியில் நடந்த மண்ணுளிப்பாம்பு கடத்தல் முயற்சி

ABOUT THE AUTHOR

...view details