திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதாவின் கணவர் கணேசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 6 ஆம் தேதி கோயமுத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
அப்போது குற்றப்பிரிவு காவலர்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கணேசனின் ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்து கணேசன் கையிலிருந்த கை விலங்கை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்துத் தூக்கி எறிந்தன.